Powered By Blogger

6.6.13

உனக்காக...

ஒவ்வொரு முறை எதிர்பார்த்து ஏமாறும் போதும் ,
என் மனம் எதிர்பார்ப்பதோ...
''எப்போதும் யாரிடத்திலும் எதையும் எதிர்பார்கதே'',
என்ற உன் அன்பான அறிவுரையை மட்டுமே :(

10.4.13

எதுவுமே இல்லாத சிறுமிக்கு உண்ண ஏதாவது கிடைக்கட்டும்     
                                                   என்றெண்ணிய     அவளுக்கு,
எல்லாம் இருந்த காரணத்தினால் வீட்டிற்கு வந்தபின் யோசிக்க வேண்டியதாயிற்று, என்ன சமைப்பதென!

15.3.13

ஓடும் காலங்கள்!

மின் விசிறியின் காற்று மேனியில் உரைக்காமல் போகவே ,
                    அதைப் பழுதுபார்க்க விரைந்தபோதுதான் புரிந்தது,
நொடிதோறும் உள்ளிழுத்து வெளிவிடும் மூச்சுக்காற்றை
                                     கவனிக்க நேரமில்லையே என!

அழகிய செந்தமிழ்

சீன மொழியின் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துறுக்களை
                                கற்றபின்தான் நினைவிற்கு வருகிறதாம்,
அழகிய செந்தமிழில் வெறும் இருநூற்றி நாற்பத்தியேழு
                                       எழுத்துக்கள் தான் என்று!

14.3.13

Express thoughts!

-PC in business news doesn't mean Personal Computer but P.Chidambaram!
-How is that such beautiful girls and handsome guys displayed in matrimonial sites are still single?
-Identifying who the host is and who the guest is in a CNN-IBN interview is like a jigsaw puzzle for a amateur news watcher!

24.2.13

எதுவுமே இல்லாத சிறுமிக்கு உண்ண ஏதாவது கிடைக்கட்டுமே
                                                                                                    என்று எண்ணிய அவளுக்கு ,
எல்லாம் இருந்த காரணத்தால் வீட்டிற்கு வந்து யோசிக்க வேண்டியதாயிற்று
                                                                                                                    என்ன சமைப்பதென!

6.11.11

How a teacher shouldn’t be?


Neither lenient nor strict!
Invisibles between extremes are always not easy to identify!
Need not be a friend, but don’t get into the ‘unwanted list’!
Questions can be asked but answers ‘should not’ be expected!
In fact every single creature in this World is busy.
So, correcting the test papers in class will only add flames to fire!
There is something more always.
Don’t make us, ‘syllabus-maniac’!
World is vast with more eminent personalities.
People who share all good things without beating their own drums
Always deserve admiration.
Veracity can be tested.
But ‘assignments’ are not the parameters to estimate life’s important factors!
Test papers and numerical figures can’t decide everything!
Life is to move on…
‘Studying’ is done! Rest is not with us!

அன்பு


"விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டேன்" என்று கூறினாயே ?
என்று,எதையோ இழந்ததைப் போல தாயிடம் கேட்டது,
உண்மையான அன்பென்றால் என்ன என்பதை
இன்றும்கூட உணராத பதினெட்டு வயதான குழந்தை ! 

தாயின் கண்டிப்பு


ஒவ்வொரு முறை நீ என்னை உன் சந்தேக வட்டத்தினுள் கொண்டுவரும்போதும் தெரிகிறது,
உன் வாழ்ககையில் நீ எதையோ தவறாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாய் என்று!

வெறுப்பு


உன்னை வெறுக்க எவ்வளவோ முயற்சித்தேன்.
இறுதியில் வெறுக்கவும் செய்தேன்,
உன்னையல்ல ! உன்னை வெறுக்க வேண்டும் என்ற என் முயற்சியை !

தாயிடம் சேய்.


என் இன்ப துன்பங்களையெல்லாம் உன்னுடன் பகிர்ந்து கொண்டேன்,
கேட்பதற்கு யாரும் இல்லை என்பதற்காக அல்ல!
உன்னால் தான் நான் இவ்வுலகிற்கு அறிமுகமானேன் என்பதை மீண்டும் மீண்டும்  உணர்த்தவே !

சோகம்

சோகங்கள் ஏதும் சொல்லிவிட்டு வருவதில்லை.
அவற்றை தகர்க்க நாம் முன்பே யோசித்துவைத்திருக்கிறோம் என்பதை அறிந்தும் கூட!

சேயிடம் தாய்.


நான் செல்லும் இடமெல்லாம் என்னை பின் தொடர்ந்து வந்து                             கொண்டேயிருந்தாய்,
" நீ தடம் மாறிச் செல்ல மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது "
                                                என்று கூறிக்கொண்டே !

26.10.11

ஜனநாயகம்

ஆறு இலக்க எண்ணில் ஊழல் !
ஆனால்
தன் வாழ்க்கையையே திட்டமிடமுடியாமல்
  திண்டாடும் சாமானிய மனிதனின்
ஒரு நாள் வாழ்வதாரச் செலவு - இரண்டே இலக்க எண்ணில் !
  ஜனநாயகத்தின் கேலிக்கூத்து !

விதியின் விடைகள்


" விதியை மதியால் வெல்லலாம் "
   மதியையே விதியால் நிர்ணயிப்பவர்களுக்கு,
இது ஒர் வாய்மொழியே!
  நாம் நினைப்பதொன்று ஆனால் இங்கு நிகழ்வதோ எதிர்பாராத ஒன்று !
"ஏன்?", "எதற்கு?", "எப்படி?" பல அழகிய கேள்விகளுக்கு,
  ஒற்றை வார்த்தையில் விடை- "விதி" !

விடையில்லா கேள்வி !

எண்ணங்கள் என்னுடன் அலைமோதிக் கொண்டிருந்தன
    கேட்பதற்கு நீ அருகில் இல்லை.
எதையுமே எண்ணத் துணியாதபோது ,
  நீ வந்து கேட்டாய் , " முன்போல் நீ என்னுடன் பேசுவதில்லையே? " என்று !

கவிதை

அனுபவத்தால் பிறப்பது மட்டும் கவிதையல்ல.
   பிறர் அனுபவத்தை அனுபவித்து உணர்வதும் கவிதையே !

சந்திப்பு


எப்போதாவது உன்னிடம் பேசும்போதுதான் தெரிகிறது
   எப்போதுமே நான் உன்னுடன் பேச விழைகிறேன் என்று !

நம்பிக்கை


வாழ்க்கை முழுதும் வாழக் கற்றுக்கொண்டேன்...
 ' எப்படி வாழக் கூடாது ' என்று என்னிடம்
     யாரும் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் !

சேமிப்பு


வாழ்க்கை தன் கோர முகத்தை
  எப்போதாவது காட்டும் போதுதான் தெரிகிறது,
சந்தோஷத்தை சேமிப்பதன் அருமை !